20,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

வரலாற்று சுவடுகள் – நாள் :மார்ச் 03

இன்றைய நாளில் உலகில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகள்


473 – கிளிசேரியஸ் மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.

724 – ஜப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார்.

1284 –வேல்ஸ் இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது.

1833 –அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.

1845 – புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1857 – இரண்டாவது அபினிப் போர்: பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.

1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது.

1861 – ரஸ்யாவின் இரண்டாம் அலெக்சாந்தர் பண்ணையடிமைகளை விடுவித்தார்.

1873 – அஞ்சல் மூலம் “ஆபாசமான, அல்லது கவர்ச்சியான” நூல்களை அனுப்புவது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

1878 – உதுமானியப் பேரரசிடம் இருந்து பல்கேரியா விடுதலை அடைந்தது. அடுத்த சில மாதங்களில் பெர்லினில் நடந்த ஆறு

நாடுகளின் மாநாட்டில் இவ்வுரிமை மறுக்கப்பட்டு, பல்கேரியா உதுமானியப் பேரரசின் குத்தகை நாடு என

அறிவிக்கப்பட்டது.

1904 – எடிசனின் போனோகிராமைக் கொண்டு முதன் முதலாக அரசியல் ஆவணம் ஒன்றின் ஒலிப்பதிவை இரண்டாம் வில்லியம்

உருவாக்கினார்.

1905 – ரஸ்யப் பேரரசர் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை ஏற்படுத்த இணங்கினார்.

1913 – பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வொசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

இடம்பெற்றது.

1918 – முதலாம் உலகப் போரில் ரஸ்யாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி, ஆஸ்திரியா, ரஸ்யா ஆகியன

உடன்பாட்டிற்கு வந்தன.

1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

1924 – உதுமானியப் பேரரசின் கலிபா இரண்டாம் அப்துல்மெசித் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து 14-ஆம்

நூற்றாண்டின் பழமை வாய்ந்த இசுலாமியக் கலீபகம் முடிவுக்கு வந்தது.

1931 – ஐக்கிய அமெரிக்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.

1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

1939 – மும்பாயில் மகாத்மா காந்தி பிரித்தானியருக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1940 – சுவீடனில் இடதுசாரி கம்யூனிஸ்டுக் கட்சியின் செய்திப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐவர்

கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு அவுஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் ஜப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத்

தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.

1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய

173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க, பிலிப்பைனியப் படையினர் மணிலாவை மீண்டும் கைப்பற்றினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படையினர் நெதர்லாந்தின் டென் ஹாக் நகர் மீது தவறுதலாகக் குண்டுகளை

வீசியதில் 511 பேர் உயிரிழந்தனர்.

1953 – கனடிய பசிபிக் ஏர் லைன்சு விமானம் ஒன்று கராச்சியில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

1958 – ஈராக்கின் பிரதமராக நூரி-அல்-சயீது எட்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969 – நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.

1974 – பாரிஸ் அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் உயிரிழந்தனர்.

1985 – சிலியில் வால்பரைசோ என்ற பகுதியில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 177 பேர் உயிரிழந்தனர்.

1986 – ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான “அவுஸ்திரேலியா சட்டம் 1986”

நடைமுறைக்கு வந்தது.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும்

வாக்களித்தனர்.

2005 – இஸ்ட்டீவ் பொசெட் என்ற அமெரிக்கர் எரிபொருள் எதுவும் மீள நிரப்பாமல் தனியே விமானம் ஒன்றில் உலகைச் சுற்றி வலம்

வந்து சாதனை படைத்தார்.

2013 – கராச்சியில் சியா முஸ்லிம்கள் வாழும் பகுதியில் குண்டு வெடித்ததில் 45 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்.

இன்றைய நாள் இறப்புகள்:

1644 – குரு அர்கோவிந்த், ஆறாவது சீக்கிய குரு (பி. 1595)

1703 – ராபர்ட் ஹூக், ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், மெய்யியலாளர் (பி. 1635)

1707 – ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (பி. 1618)

1900 – பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1847)

1940 – கடம்பி மீனாட்சி, இந்திய வரலாற்றாய்வாளர் (பி. 1905)

1944 – குமாரதுங்க முனிதாச, சிங்களக் கவிஞர், பத்திரிகையாளர் (பி. 1887)

1985 – யோசிப் சுக்லோசுகி, சோவியத்-உக்கிரைனிய வானியலாளர் (பி. 1916)

1996 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1924)

2010 – குருவிக்கரம்பை வேலு, சுயமரியாதை இயக்கத் தலைவர் (பி. 1930)

2011 – வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (பி. 1929)

2016 – பெர்த்தா காசிரீஸ், ஒந்துராசு சூழலியலாளர் (பி. 1973)

2016 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்து துடுப்பாளர் (பி. 1962)

2018 – ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய தடகள வீரர் (பி. 1929)

இன்றைய சிறப்பு நாள்:

மாவீரர் நாள் (மலாவி)

உலகக் காட்டுயிர் நாள்

விடுதலை நாள் (பல்கேரியா)

அன்னையர் நாள் (ஜார்ஜியா)




வரலாற்று சுவடுகள் – நாள் :மார்ச் 03

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு