கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிராகப் போராடுவதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் உலகளாவிய ரீதியில் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு உபகரணங்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்தும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை 40 வீதத்தால் அதிகரிக்குமாறு நிறுவனங்கள் மற்றும் அரசுகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..