12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

மத்திய அரசு எச்சரித்த உச்சபட்ச வைரஸ் ஆபத்து!

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. இது மாநிலங்களில் பதிவாகியுள்ள வைரஸ் தொற்றுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 90,648 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 53,548 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். 34,224 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,871 பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா(30,706), குஜராத்(10,989), தமிழ்நாடு(10,585) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் நாட்டின் 30 நகராட்சி பகுதிகளில் 80 சதவீத கோவிட்-19 பாதிப்பிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை கணித்துள்ளது. எனவே இங்கு ஊரடங்கு உத்தரவை தளர்த்தாமல் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி மிகக் கவனமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த 30 நகராட்சிகளும் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, தமிழ்நாடு, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களை கவனமாக கையாள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துவிதமான சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக அதிக பாதிப்புகள் நிறைந்துள்ள 30 நகராட்சிகளின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில் முதன்மை சுகாதாரத்துறை செயலாளர்கள், நகராட்சி ஆணையர்கள், மாவட்ட மேஜிஸ்டிரேட்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தங்கள் பகுதிகளில் வைரஸ் பாதிப்பின் இரட்டிப்பு விகிதம், உயிரிழப்பு விகிதம், அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அப்போது வைரஸ் பரவலின் சங்கிலித் தொடரை துண்டிக்கும் வகையில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மும்முரமாக செயல்படுத்துங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.




மத்திய அரசு எச்சரித்த உச்சபட்ச வைரஸ் ஆபத்து!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு