18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி

கொராேனா வைரஸ் பரவலின் காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கொராேனா வைரஸ் தாெற்று காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்தி 983 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிக்கின்றனர்.

இவர்களில் 27ஆயிரத்தி 84 5பேர் அந்த நாடுகளில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவர். அத்துடன் 3 ஆயிரத்து 527 மாணவர்கள், குறுகிய கால விசா பெற்றுக்கொண்ட 4 ஆயிரத்து 40 பேர், சார்ப்புடையவர்கள் 3 ஆயிரத்து 527 பேர், இரட்டை பிரஜா உரிமை பெற்றவர்கள் 480 பேரும் இவர்களில் அடங்குகின்றனர்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியில் இருந்து கடந்த வாரம்வரைக்கும் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் 3 ஆயிரத்து 938 பேர் 15 நாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் அதிகமானவர்கள் மாணவர்களும் பயிற்சிகளுக்கு சென்றிருந்த அரச அதிகாரிகள் மற்றும் அவர்களின் சார்புடையவர்களாகும்.

சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 33 மாணவர்கள் மற்றும் இந்தியாவுக்கு யாத்திரைக்காக சென்றிருந்து அழைத்துவரப்பட்ட 839 பேரும் இதில் உள்வாங்கப்படவில்லை’ என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு