18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மாணவர்களுக்கான சீருடையை வழங்கும் முறைமை தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது

பாடசாலை மாணவர்களுக்கான சீருடையை வழங்கும் முறைமை தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அது குறித்து ஆராய குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களுக்கான சீருடையை வழங்குவதற்கு முன்னைய அரசாங்கத்தால் வவுச்சர் வழங்கும் முறைமை கடைப்பிடிக்கப்பட்டது.

இவ்வாறு வவுச்சர் வழங்குவதற்கு பதிலாக சீருடை வழங்ங்குவதால், 540 மில்லியன் இலாபம் என அண்மையில் வியாபாரிகள் சிலர் அரசாங்கத்திடம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




மாணவர்களுக்கான சீருடையை வழங்கும் முறைமை தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு