20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரோஹித்தவுக்கு அழைப்பு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரோஹித்த போகொல்லாகமவுக்கு அறிவித்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

தான் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானதாக ரோஹித்த போகொல்லாகம குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அதற்கமையவே அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, எவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

தமது நிறுவனத்தை முறைக்கேடாக கையகப்படுத்தியமையால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் நிசங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அதற்கமையவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

இதற்கு முன்னரும் நிசங்க சேனாதிபதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.




ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரோஹித்தவுக்கு அழைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு