சீனாவில் எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 19 பேர் உயிரழந்ததுடன் 172 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஜேஜியாங் மாகாணத்தின் வென்லிங் என்ற நகரில் நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றது.
நெடுஞ்சாலையொன்றில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கி வெடித்தத்தில் அருகிலிருந்த வீடுகள், தொழிற்சாலைகள் சேதமடைந்ததுடன் பாரிய தீ பரவி பல வாகனங்களும் தீக்கிரையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 172 பேர் தொடரந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..