கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தானில் தங்கியிருந்த 129 இலங்கையர்கள் இன்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
கராச்சி நகரிலிருந்து, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் அதிகாலை 4.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.













0 Comments
No Comments Here ..