11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

தோனி பட நாயகன் சுஷாந்த் சிங் குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி

தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உடல் தகனம் செய்யப்பட்ட அதே நேரத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அவரது உறவினர் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஞாயிறு அன்று தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்ததுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திடீரென எடுத்த விபரீத முடிவு, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

நேற்று காலை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில் அவரது உடல் மும்பை வைல் பார்லே பகுதியில் உள்ள இடுகாட்டில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. முன்னதாக சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து அவரின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் விமானம் மூலம் மும்பை வந்தனர். சுஷாந்த் சிங் மரணத்தில் அவரது உறவினர்கள் சிலர் சந்தேகமும் எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை சுஷாந்த் சிங் உடல் தகனம் செய்யப்பட்ட அதேநேரத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அவரது உறவினர் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். சுஷாந்த் சிங்கின் மாமா மகன் அம்ப்ரேந்தரா சிங்கின் மனைவியான சுதா தேவி என்பவர் கடந்த சில நாள்களாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சையில் இருந்துள்ளார். ஞாயிறு அன்று சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான செய்தி கேட்டது முதல் சுதா தேவி மனம் உடைந்து காணப்பட்டார்.

அப்போது முதல் அவர் தண்ணீர் மற்றும் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்கின்றனர் உறவினர்கள். இதனால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த சுதா தேவியின் உடல்நிலை இன்னும் மோசமானது. நேற்று மதியம் அவர் தனது சுயநினைவை இழந்தார். அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு காலமானார்.

முன்னதாக சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான செய்தியை மும்பை போலீஸார் பாட்னாவில் இருக்கும் அவரின் தந்தைக்கு போன் மூலம் தெரிவித்தனர். அதைக்கேட்ட அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு, திங்கள் கிழமை விமானம் முலம் மும்பை சென்றார். சுஷாந்த் சிங்கின் மரணம் அவரது குடும்பத்தினரை மிகக் கடுமையான அளவில் பாதித்துள்ளது.




தோனி பட நாயகன் சுஷாந்த் சிங் குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு