11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

இரண்டே நாளில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய திருமணம்

தனது கணவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்துள்ளார்.

வனிதா திருமணம் செய்த இரண்டாவது நாளிலேயே திருமணம் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் வடபழனி போலீஸில் புகார் அளித்தார். அதில் தனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்.

தாங்கள் இதுவரை விவாகரத்து செய்து கொள்ளவில்லை. தன்னை விவாகரத்து செய்யாமலேயே தனது கணவரான பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என கூறியுள்ளார்.

இதேவேளை, விவாகரத்து பெறாமேலேயே பீட்டர் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது பீட்டர் பால் வனிதாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவரது பேச்சை கேட்டு தன்னை விவாகரத்து செய்ய போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வனிதாவும் பீட்டர் பாலும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் வனிதா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இரண்டே நாளில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய திருமணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு