19,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது நாளகவும் நீடித்து வருகின்றது. அவர்களுக்கு மாநில அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கெஜ்ரிவால் இன்று ஆய்வு செய்ய உள்ளார். அவருடன் மாநில அமைச்சர்களும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும் டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இது குறித்து மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், 6ம் சுற்று பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது.




நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு