19,Jun 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு!

அசாதாரண சூழ்நிலையால் நெடுந்தீவில் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் பத்திமாதாஸன் லீலியான்குறுஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தொடரும் மழை, மீனவ படகுகள் பல சேதம், கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு பல படகுகள் மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது.

படகுகளை பாதுகாப்பாக கட்டுவதற்கும் பாதுகாப்பு அணை வாண் இல்லாமை, இம் மீனவர்களது வாழ்வாதார முதலீடுகள் அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த புரவி சூறாவளியினால் நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும் 112 மீனவ குடும்பங்களின் படகுகள் , இயந்திரம், தெப்பம், வலை, களஞ்கட்டி என்பன அழிவடைந்து பல இலட்சம் அழிவைச் சந்தித்துள்ளனர்.

நெடுந்தீவு J/ 1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும், 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கரையோரங்கள் பாரியளவில் சேதம் அடைந்து மீனவ குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலர் F.C.சத்தியசோதி தெரிவித்தார்.





கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு