சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரது தண்டனை காலம் முடிந்து அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27 ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் தனக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தியுள்ளார். அவர் எந்த நேரத்திலும் விடுதலை ஆகலாம் என்ற ஒரு தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் 4 வது ஆண்டு நினைவு தினம் கடந்த 5 ஆம் திகதி அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது நெருங்கிய தோழியான சசிகலா, சிறையில் ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் சிந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்று முழுவதும் அவர் ஜெயலலிதாவின் நினைவுகளில் மூழ்கி இருந்துள்ளார்.
0 Comments
No Comments Here ..