24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் மழையால் ஏற்பட்ட குழியில் விழுந்து ஒருவர் மரணம்

மழை நிரம்பிய வெள்ளக்குழியில் தவறுதலாக விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி துன்னாலை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் மழை வெள்ளத்தில் வீதியோரமாக சென்றவேளை அருகிலிருந்த குழியினுள் தவறுதலாக விழுந்துள்ளார்.

வீட்டிலிருந்த சொன்றவரை காணாத உறவினர்கள் தேடியபோது வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டனர்.

சம்பவம் தொடர்பில் பருத்திதுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




யாழ்ப்பாணத்தில் மழையால் ஏற்பட்ட குழியில் விழுந்து ஒருவர் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு