நடிகை சித்ராவிற்கு பல காதல்கள் இருந்தன. மது பழக்கம் இருந்தது. அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருந்தார். ஹேம்நாத்துடன் திருமணம் நடந்தால், சித்ரா பற்றிய பல தகவல்களை வெளியிடுவோம் என ஏற்கனவே மிட்டல் வந்தது என அதிர்ச்சி முறைப்பாடளித்துள்ளார் ஹேம்நாத்தின் தந்தை.
இது தொடர்பில் அவர் போலிஸ் முறைப்பாடளித்துள்ளார்.
தனது கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
போலீஸ் விசாரணையில் சித்ரா மீது ஹேம்நாத் சந்தேகப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று ஹேமந்த்தை கைது செய்தனர். ஆனால் வேறு யாரையோ காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர், என ஹேமந்த் தந்தை கூறியிருந்தார். இது தொடர்பாக ஹேம்நாத் தந்தை ரவிச்சந்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது
சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் பலவிதமாய் இருக்கின்றன. சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்ததாகவும், அதில் ஒருவருடன் திருமணம் வரை சென்று நின்று விட்டதாகவும் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் சித்ரா மது பழக்கம் உடையவர் என்றும் அரசியல்வாதிகளுடன் பேசி வந்ததால், இந்த திருமணம் நடைபெற்றால் திருமணத்தை நிறுத்த பல ஆதாரங்களை கொடுப்போம் என மிரட்டினர் என்றும் தகவல்கள் வந்தன.
இதெல்லாம் பார்க்கும்போது சில நாளுக்கு முன்னால் சித்ரா என்னிடம் கூடிய விரைவில் கடன்களை அடைக்க வேண்டும் என்று கூறியது நினைவிற்கு வருகிறது.சித்ரா பிரபலமானவர் என்பதால் அவர் மீது பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலர் முதலீடு செய்துள்ளனர் மற்றும் சித்ரா உடன் தொடர்பிலும் இருந்துள்ளார்கள். திருமணம் நடைபெற்றால் அவரின் மதிப்பு குறையும் என்பதால் அவரை மிரட்டி இருக்கலாம் எனவும் சந்தேகம் வருகிறது. அதுமட்டுமில்லாது சித்ராவும் ஹேம்நாத்தும் தங்கியிருந்த Pleasent stay hotel இல் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வருவதால் அது சம்பந்தமாகவும் தனக்கு சந்தேகம் வருகிறது.
என் மகனிடம் பேசியபோது, ‘சித்ரா சில நேரம் தனக்கு வரும் சில தொலைபேசி அழைப்புக்களை பதட்டத்துடன் தனியாக சென்று தான் பேசுவார். பேசியவுடன் அதை அழித்து விடுவார்” என்றும் கூறினார். எனவே சித்ரா யார் யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்றும், அதன் அடிப்படையில் திருமணம் நடைபெற்றால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மிரட்டியது யார் யார் என்றும் கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் சமூக வலைத்தளங்களில் அதிகமான தகவல்கள் வருவதால், அதை பொய் என்று மறுக்கவும் முடியவில்லை. வழக்கு விசாரணைக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது என்பதால் எனது சந்தேகங்களையும் கருத்துக்களையும் புகார் மனுவாக தங்களிடம் சமர்ப்பிக்கிறேன். காவல் ஆணையர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..