12,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

கொரோனாவுடன் நடமாடி திரிந்த அக்கரப்பத்தனை பிரதேசசபை தவிசாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அக்கரப்பத்தனை பிரதேசசபை தவிசாளர் கதிர்ச்செல்வத்திற்கு எதிராக சட்டநடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

கொரோனா தொற்றுடன் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நடமாடி திரிந்தமைக்காக அவர் மீது நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுமென, லிந்துலை, தலவாக்கலை பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி அக்கரபத்தனை பிரதேசசபை தவிசாளர் மற்றும் குடும்பத்தினர் பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மறுநாள் நிகழ்வுகளில் கதிர்ச்செல்வம் கலந்து கொண்டார். அதில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பல தவிசாளர்கள் பங்கு பற்றியிருந்தனர். அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.





கொரோனாவுடன் நடமாடி திரிந்த அக்கரப்பத்தனை பிரதேசசபை தவிசாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு