கர்ப்பமாக இருந்த தனது செல்ல நாய்க்குப் போட்டோ சூட் எடுத்துள்ளார் ஒரு அமெரிக்கர்.
பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும் போது புகைப்படங்கள் எடுக்காமலிருப்பது அந்தக்காலம். இப்பொழுது நிலை மாறி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது தனியாகப் போட்டோ சூட்டே நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில், தனது செல்ல நாய்க்கும் ஒருவர் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் கைட்டி ஈவர்ஸ். நாய்களின் மீது பிரியம் கொண்ட இவர் சமீபத்தில் ரோட்டில் கைவிடப்பட்ட ஒரு நாயை மீட்டெடுத்தார். அந்த நாயை அவர் தத்தெடுத்து அதற்கு மருத்துவ பரிசோதனை செய்யும் போது அந்த நாய் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நாயை வைத்து பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது வித விதமாகப் புகைப்படம் எடுப்பார்களே அதே இந்த நாயை வைத்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அந்த நாய்க்கு லில்லி-மே எனப் பெயரிட்டுள்ளார். கோல்டன் ரிட்ரைவர் ரக நாயான லில்லி மே-யின் புகைப்படத்தை அதைப் புகைப்படம் எடுத்தவர் தனது இஸ்டாகிராமில்பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
லில்லி -மே தற்போது 8 குட்டிகளை ஈன்றுள்ளது. தற்போது அந்த 8 குட்டிகளையும், தாயையும் கைட்டியே தத்தெடுத்துள்ளார். மனிதர்களைப் போல நாய் கர்ப்பமாக இருக்கும் போது அதற்காகப் போட்டோ சூட் நடத்தியது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
0 Comments
No Comments Here ..