20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி - கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.

கல்மடு நகர் சம்புக்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

இந்தநிலையில் பிரதேச மக்கள் உள்ளிட்ட தரப்பினர் அவரை தேடும் பணிகளை முன்னெடுத்திருந்த நிலையில் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்




கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு