நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை 10:30 மணிக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இருந்ததைவிட அவரது ரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலும், அது வழக்கத்திற்கு அதிகமான அளவில் இருப்பதால் அவருடைய இரவு அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் எதுவும் அபாயகரமான எதையும் வெளிக் காட்டவில்லை என்றும் அந்த செய்தி குறிப்பில் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்துக்கு இன்று அப்பல்லோ மருத்துவமனை மேலும் அதிக உடல்நல பரிசோதனைகளை செய்ய உள்ளது. அவற்றின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும்.
ரஜினிகாந்த் தொடர்ந்து நெருக்கமாக கண்காணிக்கப்படுவார், அவரைப் பார்க்க வருகை தருபவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தம் எந்த அளவு கட்டுப்பாட்டுக்கு வருகிறது என்பதைப் பொருத்து ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்றைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..