30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

ஜோ பைடன் புதிய பாதுகாப்பு அதிகாரிகளை அமைக்க தீர்மானம்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள ஜோ பைடன், தனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான புதிய அதிகாரிகள் குழுவை அமைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான் துணை ஜனாதிபதியாக இருந்தபோது தனக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாவல் படைக் குழுவினரை மீண்டும் அழைக்க விரும்புவதாக

இதன் காரணமாக, பல மூத்த பாதுகாவல் படை அதிகாரிகள் மீண்டும் ஜனாதிபதியில் பாதுகாப்புப் பணிக்குத் திரும்பலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இதன்படி, அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு தற்போதுள்ள பாதுகாவல் படைக் குழுவினரை நீக்கிவிட்டு புதிய குழுவினரை நியமிப்பார்.

தற்போதைய பாதுகாவல் அதிகாரிகள் ட்ரம்ப்புக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுவதால் பைடன் இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது




ஜோ பைடன் புதிய பாதுகாப்பு அதிகாரிகளை அமைக்க தீர்மானம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு