நாட்டின் தனிமைப்படுத்தல் நிலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகள் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 5 மணி முதல்- எஹலியகொட, மொரகல, பூஜாபிட்டி, பமுனுகம, திவனவத்த கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, அக்கறைப்பற்று காவல்துறைபிரிவிற்குட்பட்ட அக்கறைப்பற்று 05 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவுகளும் நகர அதிகாரத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும், அக்கரைப்பற்று 8இன் கீழ் 1, 8இன் கீழ் 3 மற்றும் அக்கரைப்பற்று 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
பாலமுனை 1, ஒலுவில் 2, அட்டாளைச்சேனை 8 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன
0 Comments
No Comments Here ..