ஆண் போட்டியாளர்களில் ஆரிக்குத்தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது இவரது ஒருநாள் சம்பளம் 85,000 ரூபாய், 105 நாட்களுக்குக் கணக்கிட்டு அந்தத் தொகையுடன் டைட்டில் வென்றதற்காக வழங்கப்படும் ஐம்பது லட்சமும் சேர்த்து கிட்டத்தட்ட 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆரிக்கு அடுத்தபடியாக ரமேஷின் சம்பளம் ரூ.60,000. பாடகர் வேல்முருகனுக்கு ரூ.50,000. ரியோவுக்கு ஒருநாளுக்கு ரூ.35,000. ஆஜித்துக்கு ரூ.15,000. பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் மூவருக்கும் நாளொன்றுக்கு ரூ.10,000 வழங்கப்படுகிறது. இதுவரை பிக் பாஸ்சில் கலந்து கொண்ட போட்டியாளர்கல்ள இவர்களுக்கு தான் குறைவான சம்பளம் வழக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பெண் போட்டியாளர்களில் ரேகா, சனம் ஷெட்டி இருவருக்கும் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் சம்பளம். இவர்கள் இருந்த நாட்களைக் கணக்கிட்டு அதில் வரி பிடித்தம் போக மீதியைப் பெற்றுக்கொண்டார்கள். அடுத்து சுசித்ராவின் ஒரு நாள் சம்பளம் 80,000 ரூபாய். அர்ச்சனா, ரம்யா பாண்டியன் இருவருக்கும் ரூ. 75,000. கேப்ரியல்லாவின் ஒருநாள் சம்பளம் ரூ. 70,000. அவர் ஃபைனலில் இருந்து வெளியேற விரும்பிப் பெற்றுக் கொண்ட ஐந்து லட்சம் இதில் எக்ஸ்ட்ரா.
ஷிவானிக்கு ரூ.60,000. நிஷா, சம்யுக்தா, அனிதா சம்பத் மூவருக்கும் ரூ.40,000. வழங்கப்பட்டது
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த சீசன் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டது. இவர் கிட்டத்தட்ட 16 லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்தார் எனவும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். பிக் பாஸ் டைட்டில் வென்ற ஆரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லாப் புகழும் வாக்களித்த உங்களுக்கே என கூறி கையில் ட்ராபியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பல முன்னணி நடிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..