நாட்டில் மேலும் 346 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 56422 ஆக அதிகாகித்துள்ளது.
அத்துடன் 7 ஆயிரத்து 529 கொவிட் 19 நோயாளர்கள் சிக்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48000 ஐ கடந்துள்ளது.
இன்று மேலும் 633 பேர் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்ப நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48617 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments
No Comments Here ..