ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46 ஆவது அமர்வு இன்றையதினம் சுவிஸ்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளை மறுதினம் புதன்கிழமை அமர்வில் வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றவுள்ளார்.
இலங்கை தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சரின் உரையைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட் அம்மையாரின் இலங்கை குறித்த வாய்வழி அறிக்கை அமர்வுக்கு சமர்ப்பிக்கப்படும்.













0 Comments
No Comments Here ..