திருகோணமலை எண்ணெய் குதங்கள் இலங்கை வசமாகும் என்பது உண்மை - ஆனால் இந்தியாவிடம் இருந்து எண்ணெய் குதங்களை இலங்கை அபகரிக்கும் என்ற அர்த்தத்தில் தான் கூறவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல வினாக்கான விடை நேரத்தில், “உங்களை பைத்தியக்காரன் என பிரதமர் கூறியுள்ளார். இது குறித்த உண்மைத்தன்மை என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியுமா?” என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வி எழுப்பினார்.
இதற்கு வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.மனநல வைத்தியரின் கடமையை பிரதமர் செய்ய மாட்டார் என நான் நம்புகிறேன், அவ்வாறு மனநல வைத்தியராக பிரதமர் இருப்பார் என்றால் முதலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்தே அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.













0 Comments
No Comments Here ..