20,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க ஆலோசனை குழு அமைப்பு

அனைத்து சட்டமன்ற கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூட்டினார். அப்போது ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு எம்எல்ஏ இடம் பிடித்துள்ளனர்.

திமுக- எழிலன்

அதிமுக- சி. விஜயபாஸ்கர்

பாஜக- நயினார் நாகேந்தின்

பாமக- ஜிகே மணி

காங்கிரஸ்- முனிரத்தினம்

மதிமுக- சதன் திருமலைக்குமார்

விடுதலை சிறுத்தைகள்: பாலாஜி

கொமதேக- ஈஸ்வரன்

தமிழக வாழ்வுரிமை கட்சி- வேல்முருகன்

புரட்சி பாரதம்- ஜெகன் மூர்த்தி

சிபிஐ- ராமச்சந்திரன்

சிபிஎம்- நாகை மாலி

மனிதநேய மக்கள் கட்சி- ஜவாஹிருல்லா

இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும். 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க ஆலோசனை குழு அமைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு