25,Apr 2024 (Thu)
  
CH
கவிதைகள்

புலிகளின் குரல் பத்திரிகை ஆசிரியர் `இறைவன்`அண்ணா

ஒரு மகனின் வரிகள்...

அன்று மே 16 விடிகாலைப்பொழுது சரணடைய வேண்டும் என்பது உறுதியாக விட்ட போதிலும் எங்கே எப்படி என அறிந்திருக்கவில்லை காலை வேளையில் சரணடைவதற்காக புதுக்குடியிருப்பு பக்கமாக நகர்ந்தோம் சரமரியாக செல்வீச்சும் சன்னங்களும் வந்து கொண்டிருந்தன செல்கின்ற வழியெங்கும் பிணங்கள் ஏற்கனவே வெட்டப்பட்ட பதுங்குகுழிகளுக்குள் இருந்து இருந்து நகர்ந்தோம் இறுதியாக புதுக்குடியிருப்பு பக்கமாக இருந்த இறுதி எல்லையை எட்டிய பொழுது எதிர்பாராத விதமாக அப்பாவை சந்திக்க நேர்ந்தது அந்த இடம் அடுத்து ஒரு அபரிவிதமான யுத்தம் ஒன்றுக்கு தயாரன இடமாக ஏதோ ஒரு மாயம் குடிகொள்ளப்போகும் இடமென்பது உணரக்கூடியதாய் இருந்தது.


அப்பா உடனடியாக எங்களிடம் இருந்த அவரது புகைப்படங்களை எடுத்து கிளித்து எறிந்துவிட்டு உடனடியாக வட்டுவாகல் பக்கம் செல்லும் படி சொன்னார் சிறிது தூரம் தானும் வந்தார் வருகின்ற வழியில் திடீரென ஒரு ஆர்பியி எறிகணை வந்து வெடித்தது நாங்கள் சிதறி ஓட ஆரம்பித்தோம் சாரை சாரையாக ரவைகள் வர ஆரம்பித்தன ஓட ஆரம்பித்தோம். ஆனால் இன்று நான் ஒன்றை உணர்கிறேன் அப்பா தான் வரித்துக்கொண்ட சத்தியத்தின் மீது தீராத பற்றுதி கொண்டிருந்தார் அதே போல் எங்களுக்கும் அதை சரியாக தந்திருக்கிறார் அதனாலேயே என்னமோ அப்பாவை எங்களுடன் வரச் சொல்லி அம்மாவோ நானோ அழைத்து அப்பாவை தர்மசங்கடத்துக்குள் உள்ளாக்கவில்லை.........


Thirunilavan Thavapalan

தகவல் எம்முடன் பகிர்ந்துகொண்டவருக்கு நன்றிகள்


உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




புலிகளின் குரல் பத்திரிகை ஆசிரியர் `இறைவன்`அண்ணா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு