17,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால், மருந்து விற்பனை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டது. அங்கும் ஏராளமானோர் திரண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. 


இதையடுத்து கொரோனா சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப ரெம்டெசிவிர் மருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் அரசு சார்பில் விற்பனை நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் தேவைப்படும் தனியார் மருத்துவமனைகள் https://tnmsc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு