26,Apr 2024 (Fri)
  
CH
ஆன்மிகம்

சத்குரு பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

ஈஷா என்கிற இந்திய அறக்கட்டளை நிறுவனத்தை நிறுவியவர்தான் ஜக்கி வாசுதேவ். இவர் ஒரு யோகி . இவர் இந்தியாவில் புகழ்பெற்ற யோகியாக இருந்து வருகிறார். ஜக்கி வாசுதேவின் வாழ்க்கை வரலாற்றை இந்த தொகுப்பில் காணலாம்..

ஜக்கி வாசுதேவ் பெரும்பாலும் அனைவராலும் சத்குரு என்றே அழைப்படுகிறார். பெரும்பாலானோருக்கு அவரின் இயர்பெயர் தெரிவதில்லை. இவர் ஈஷா அறக்கட்டளை என்னும் லாப நோக்கமற்ற அமைப்பை நிறுவியவர். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் யோகா தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இவர் ஒரு ஆசிரியர், ஊக்கமளிக்கும் பேச்சாளார், ஆன்மீக குரு ஆவார். கண் மருத்துவரான தனது தந்தைக்கு பிறந்த இவர் இந்திய ரயில்வேயில் பணிப்புரிந்து வந்தார். அவரது குடும்பம் அடிக்கடி குடி மாறியபோது பயணங்கள் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. மேலும் இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவார். சில நேரங்களில் சில நாட்கள் கூட காட்டிலேயே தங்கி விடுவாராம்.

​1 மோட்டார் சைக்கிள் மீது ஆர்வம்

இவர் தனது குழந்தைப்பருவத்தில் நடந்த சில நிகழ்வுகளால் பாம்புகள் மீது மிகுந்த அன்பை கொண்டிருந்தார். பிறகு தனது இளமை பருவத்தில் மோட்டார் சைக்கிள் மேல் மிகுந்த காதல் கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றி வந்தார். கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தப்பிறகு அவர் ஒரு தொழிலதிபராக மாறினார். 25 வயதில் அவருக்கு நடந்த ஒரு ஆன்மீக அனுபவம் அவரை ஆன்மீகம் பக்கம் இழுத்தது. அதன் மூலம் அவர் தனது வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்தார்.

பிறகு அவர் யோகா ஆசிரியராக மாறினார். யோகா கலையை கற்றுக்கொடுக்க ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தை துவங்கினார்.

​2 குழந்தை பருவமும் ஆரம்பகால வாழ்க்கையும்

ஜக்கி 3 செப்டம்பர் 1957 அன்று கர்நாடகாவில் உள்ள மைசூரில் சுசிலா மற்றும் டாக்டர் வாசுதேவ் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர்கள் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். இவருக்கு ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

அவரது தந்தை வாசுதேவ் வேலை காரணமாக அடிக்கடி இடம் மாறுபவர் என்பதால் அவரது குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்துக்கொண்டே இருந்தது. சிறுவயதிலேயே ஜக்கி சுறு சுறுப்பான, புத்திசாலியான குழந்தையாக இருந்தார்.

அவர் அடிக்கடி அருகில் உள்ள காட்டிற்கு சென்று வன விலங்குகளை குறிப்பாக பாம்புகளை கவனிப்பதில் தனது நேரத்தை செலவிடுவார். அவர் தனது 12 ஆவது வயதில் யோகா ஆசிரியரில் முக்கியமானவரான மல்லடிஹல்லி ஶ்ரீ ராகவேந்திரா சுவாமிஜியுடன் நட்பு கொண்டார்.

சுவாமிஜியும் அவருக்கு சில எளிய யோகாசனத்தை கற்றுக்கொடுத்தார். ஜக்கி ஒரு நாள் கூட இடைவெளி விடாமல் அவற்றை தொடர்ந்து கற்று வந்தார். பள்ளிப்படிப்பை முடித்தபிறகு ஜக்கி மைசூர் பல்கலைகழகத்தில் தனது கல்லூரி படிப்பை துவங்கினார்.

ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி காலத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் நிறைய பணம் சம்பாதித்தார்.

​3 தொழில்

கல்லூரி படிப்பை முடித்தப்பின் ஜக்கி வாசுதேவ் ஒரு தொழிலதிபராக தனது வாழ்க்கையை துவங்கினார். அவர் மிகவும் புத்திசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருந்தார். அவர் கோழிப்பண்ணை, செங்கல் வேலை செய்யுமிடம் மற்றும் கட்டுமான வணிகம் உட்பட பலவகையான வணிகங்களை துவங்கினார்.

20 வயதுக்கு பிறகு அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆகியிருந்தார். 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிற்பகலில் அவரது வாழ்க்கை மாற்றம் துவங்கியது.

அவருக்கு ஆன்மீகத்தின் மீது ஆர்வம் அதிகமானது. இதனால் இவர் எதிர்காலம் குறித்து மறுபரீசிலனை செய்ய நினைத்தார். சாமுண்டி என்ற மலையில் அமர்ந்து இருந்தபோது அவருக்கு ஆழ்ந்த ஆன்மீக ஞானம் கிடைத்தது. அந்த அனுபவம் அவருக்கு ஏற்பட்டு ஒரு வாரத்தில் தனது தொழில்களை தனது நண்பரிடம் ஒப்படைத்தார்.

மேலும் பல அனுபவங்களை பெற அவர் நீண்ட பயணத்தை மேற்கொண்டார். சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு யோகா வகுப்புகளை துவங்கி யோகாவையும் அதுக்குறித்த அறிவியலையும் மக்களிடையே பரப்ப வேண்டும் என முடிவெடுத்தார்.

4 யோகா வகுப்புகள்!

1983 இல் இவர் மைசூரில் தனது யோகா வகுப்புகளை துவங்கினார். அவர் முதன் முதலில் துவங்கிய வகுப்புகளில் மொத்தமே 7 பேர்தான் இருந்தனர். பிறகு நாட்கள் செல்ல செல்ல ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவிலும் தனது யோகா வகுப்புகளை துவங்கினார்.

வகுப்புகளுக்கு பணம் வாங்குவதை அவர் மறுத்தார். அதற்கான செலவுகளை தனது கோழிப் பண்ணையிலிருந்து எடுத்து கொண்டார். 1992 ஆம் ஆண்டு ‘ஈஷா யோகா’ என்ற பெயரில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பை துவங்கினார். இது லாப நோக்கமற்ற ஆன்மீக அமைப்பான ‘ஈஷா அறக்கட்டளை’ யின் கீழ் இயங்கியது.

​​5 கோயம்புத்தூர்

கோயம்புத்தூருக்கு அருகில் அமைக்கப்பட்ட அமைப்பு சில ஆண்டுகளில் மிகவும் பிரபலமானது. இன்று இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கப்பூர், கனடா, மலேசியா, உகாண்டா, சீனா, நேபாளம், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் யோகா வகுப்புகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

இந்த ஈஷா அறக்கட்டளையானது பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை செய்துள்ளது. 2003 ஆம் ஆண்டு கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ‘ஆக்சன் ஆஃப் ரூரல் ரீஜிவ்னேசன் (ஏ.ஆர்.ஆர்) என்ற அமைப்பை ஈஷா உருவாக்கியது.

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு முழுவதும் ஆயிரகணக்கான கிராம மக்களுக்கு உதவுவதையே இந்த அமைப்பு நோக்கமாக கொண்டுள்ளது.

​6 புகழ்!

இந்த அறக்கட்டளை 2004 ஆம் ஆண்டு தமிழக சுற்று சூழலை பாதுக்காக்க ‘ப்ரொஜக்ட் கீரீன் ஹேண்ட்ஸ்’ (பி.ஜி.எச்) ஐ நிறுவியது. மாநிலத்தில் இயற்கை சூழலை அதிகப்படுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் 114 மில்லியன் மரங்களை நடுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஜக்கி வாசுதேவ் உலகப்புகழ் பெற்ற நபர் ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் கலந்துக்கொண்ட மில்லினியம் உலக அமைதி உச்சி மாநாட்டில் பேசியுள்ளார். உலகெங்கும் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் உரையாற்றியுள்ளார்.

2006, 2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இவர் ‘உலக பொருளாதாரம் மன்றம்’ குறித்தும் பேசியுள்ளார்.

​7 எழுத்தார்வம்!

இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட, இவர் எட்டு வெவ்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் ஒரு திறமையான கவிஞரும் கூட ஓய்வு நேரங்களில் கவிதைகள் எழுதுவது இவரது பொழுதுபோக்காகும்.

2017 ஆம் ஆண்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் வடிவமைத்த 112 அடி ஆதி யோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி ‘ஈஷா யோகா’ மையத்தில் திறந்து வைத்தார்.

அதே ஆண்டிலேயே ஜக்கி வாசுதேவ் ‘நதிகளுக்கான பேரணி’ என்ற திட்டத்தை துவங்கினார். தண்ணீர் பற்றாக்குறை மற்றும் ஆறுகளின் மாசுப்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

​8 படைப்புகள்

ஜக்கி ஈஷா அறக்கட்டளையை நிறுவினார். அதன் மூலம் யோகா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தினார் மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடங்கினார்.

ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான தன்னார்வலர்களை கொண்ட இந்த அமைப்பு ‘ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில்’ என்ற சர்வதேச அமைப்போடு இணைந்து செயல்படுகிறது.

இந்த அமைப்பு உலகெங்கிலும் பல நாடுகளிலும் தனது சேவைகளை செய்து வருகிறது.

​9 விருதுகள் மற்றும் சாதனைகள்

இவரது ‘ப்ரொஜக்ட் க்ரீன் ஹேண்ட்ஸ்’ (பி.ஜி.எச்) என்ற அமைப்புக்கு ஜூன் 2010 ஆம் ஆண்டு ‘இந்திரா காந்தி பரியவன் புராஸ்கர்’ என்ற விருதை இந்திய அரசு வழங்கியது.

சுற்றுசூழல் பாதுகாப்பு துறையில் அவர் செய்த பணிக்கு மற்றும் சுற்றுசுழல் சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியதற்காகவும் ‘தி இண்டியன் எக்ஸ்ப்ரஸ்’ 2017 ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஜக்கியை ஒருவராக பட்டியலிட்டது.

ஆன்மீக துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக 2017 ஆம் ஆண்டு இந்திய அரசின் மரியாதைக்குரிய பத்மவிபூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு இந்தியா டுடேவின் 50 சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இவரது பெயரும் இருந்தது.

​10 தனிப்பட்ட வாழ்க்கை

ஜக்கி வாசுதேவ் 1984 இல் விஜயக்குமாரி என்னும் பெண்ணை திருமணம் செய்தார். அவருக்கு ராதே என்று ஒரு மகள் உள்ளார். 1997 ஆம் ஆண்டு அவரது மனைவி இறந்தார். ராதே ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆவார்.

2014 ஆம் ஆண்டில் இவர் ஜக்கியின் ஆசிரமத்தில் உள்ள பாடகரை திருமணம் செய்துக்கொண்டார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





சத்குரு பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு