29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு

கொரோனா காலத்தில், பொதுமக்கள் தங்கள் கைகளில் முன்னெச்சரிக்கையாக பணம் வைத்திருந்ததால் ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் தனது செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதுபோல், 2020-2021 நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2020-2021-ம் நிதியாண்டில் ரூபாய் நோட்டு புழக்கத்தின் உயர்வு சராசரியான உயர்வை விட அதிகமாக காணப்பட்டது. புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பு 16.8 சதவீதம் அதிகமாக இருந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில் நோட்டுகளின் புழக்கத்தில் 14.7 சதவீதம்தான் உயர்வு காணப்பட்டது.

கொரோனா காலமாக இருந்ததால், மக்கள் தங்கள் கைகளில் முன்னெச்சரிக்கையாக அதிக பணம் கையில் வைத்திருந்ததே புழக்கம் அதிகரித்ததற்கு காரணம்.

வங்கிகளில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. முந்தைய நிதியாண்டில், 2 லட்சத்து 96 ஆயிரம் கள்ள நோட்டுகள் சிக்கின என தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு