19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள தவறியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக ஐந்து மத்திய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மத்திய நிலையங்களை இரவு 10.00 மணி வரை திறந்து வைப்பதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். நாட்டில் உள்ள அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகள் தருவிக்கப்படவுள்ளன. இலங்கைக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க சர்வதேச நாடுகள் தயாராக உள்ளன.

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

சகல குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை ஏற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு