கொரோனாவுக்கு பலியான ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஓவியராக புகழ்பெற்ற இவர், இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். அதே படத்தில் பார்த்திபனின் சிறுவயது கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்தார் ஓவியர் இளையராஜா. அவருக்கு வயது 43. ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..