விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.
கும்பகோணம் பாலக்கரை நீலத்தநல்லூர் ரோடு பகுதியில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதம்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று வைகாசி மாத அமாவாசையையொட்டி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..