இணைய வழியாக மதுபானம் விற்பனை செய்யும் நடைமுறைக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதிலும் பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இணைய வழியாக மதுபான வகைகளை விற்பனை செய்யும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனைக்கு நிதி அமைச்சு அனுமதி வழங்கியிருந்ததாக இன்றைய தினம் செய்திகள் வெளியாகிருந்தன.
எவ்வாறெனினும் கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இணைய வழியாக மதுபானம் விற்பனை செய்வது பொருத்தமற்றது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சில தரப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
இந்த நிலையில், இணைய வழியாக மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
0 Comments
No Comments Here ..