22,May 2025 (Thu)
  
CH
ஆரோக்கியம்

உணவை வேகமாக சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

காலையில் எழுந்தவுடன் எத்தனை மணிநேரத்தில் சாப்பிட வேண்டும் என்றும் உணவை வேகமாக சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்றும் அறிந்து கொள்ளலாம்.

காலை உணவு மிக முக்கியம் என்கிறது, மருத்துவம்.

காலை உணவினால் வைட்டமின், மினரல்ஸ், கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். டிபன், சாப்பாடு, பழங்களை சாப்பிடலாம். எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட வேண்டும்.

காய்கறிகளை பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகள் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

அரக்கப்பறக்க அரைகுறையாக சில நிமிடங்களில் சாப்பிடுபவர்கள்தான் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினம் ஒரு பழம், காய்கறி, கீரை ஆகியவை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்






உணவை வேகமாக சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு