குரோஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது.
குரோஷியாவின் ஓசிஜெக் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற கலப்பு அணிகளுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
இறுதிச்சுற்றில் ரஷியாவும் இந்தியாவும் மோதின. இதில், இந்தியாவின் மனு பாகெர், சவுரப் சவுத்ரி ஜோடி 12-16 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்ததால், அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. முன்னதாக, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றது.
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..