03,May 2024 (Fri)
  
CH
சினிமா

பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்

மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் இன்று காலமானார். பாலிவுட்டில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம்வந்த இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 49. இவர் பியார் மெயின் கபி கபி, ஷாதி கா லட்டு, அந்தோனி கவுன் ஹே போன்ற படங்களை இயக்கி உள்ளார்.  

இயக்குனர் ராஜ் கவுஷலின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மந்திரா பேடி - ராஜ் கவுஷல் தம்பதிக்கு வீர் என்ற மகனும், தாரா என்ற மகளும் உள்ளனர்.

தமிழில் சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இது தவிர தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். இவரது கணவர் ராஜ் கவுஷல். இவர் ‘ஆண்டனி கான் ஹே’, ‘ஷாதி கா லட்டூ’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இது தவிர சில படங்களைத் தயாரிக்கவும் செய்துள்ளார்.


1999ஆம் ஆண்டு மந்திரா பேடி - ராஜ் கவுஷல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு வீர் (10), தாரா (5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


இந்நிலையில் இன்று (ஜூன் 30) அதிகாலை மாரடைப்பால் ராஜ் கவுஷல் காலமானார். அவரது மறைவுக்கு இயக்குநர் ரோஹித் ராய், நடிகை நேஹா தூபியா உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு