கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்தின் கீழ் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று வியாழக் கிழமை கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோய்யியல் வைத்திய அதிகாரி மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று காலை எட்டு மணி முதல் பிற்பகல் நான்கு மணிவரை கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்திலும், கிளிநொச்சி சாந்தபுரம் இராணுவ வைத்தியசாலையிலும், பூநகரி மத்திய கல்லூரியிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறவுள்ளன.
இதில் அனைவரையும் கலந்துகொண்டு தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் கீழ் ஆசிரியர்கள் பணியாளர்கள் என 3328 பேர் கடமையாற்றுகின்றனர் எனவே இவர்கள் மேற்படி நிலையங்களில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று தங்களுக்குரிய தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..