29,Apr 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

கந்தன் வழிபாட்டு ஸ்லோகம்

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும்.

கந்தனும் வருவான் காட்சியும் தருவான்

கவலையை நீ விடுவாய் - மனமே

கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை

 மறவாமல் நீ இருப்பாய் - மனமே.


சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்

செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்

சரவணன் அவனே ஷண்முகன் அவனே

சிவசக்தி வடிவானவன் - முருகன்.


தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்

தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்

தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற

ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்

சாமியாக நின்றான்.


பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்

பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்

பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்

பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்.


கந்தனும் வருவான் காட்சியும் தருவான்

கவலையை நீ விடுவாய் - மனமே

கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை

மறவாமல் நீ இருப்பாய் - மனமே.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





கந்தன் வழிபாட்டு ஸ்லோகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு