சப்ஜா விதையில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும். செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், குடலில் புண் போன்ற அனைத்திற்கும் தீர்வாக சப்ஜா விதைகள் இருக்கிறது.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி - 1
சப்ஜா விதை - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
தேன் - தேவைக்கு
செய்முறை:
சப்ஜா விதையை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
தர்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தர்பூசணி ஜுஸ் உடன் சப்ஜா விதை, தேன், எலுமிச்சை சாறு, புதினா இலை சேர்த்து கலக்கவும்.
அதனை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு சுவைக்கவும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..