இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம் குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி விதை - அரை கப்
உளுந்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - அரை டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தூள், புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
பிறகு மிளகாய், கொத்தமல்லி விதையை வாசனை வரும்வரை வறுத்தெடுக்கவும்.
அதேபோல் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் கொட்டி அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து பொடியாக்கி பயன்படுத்தவும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..