06,May 2024 (Mon)
  
CH
சினிமா

ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

கஜினிகாந்த் திரைப்படத்தின் போது நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்த ஆர்யாவிற்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் 'அறிந்தும் அறியாமலும்' 'நான் கடவுள்', 'மதராசப்பட்டினம்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது சாயிஷாயுடன் காதல் மலர்ந்தது. இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்துக்குப் பிறகு சாயிஷா தொடர்ச்சியாக நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சாயிஷா கர்ப்பமானார். இந்நிலையில் ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு நேற்று (ஜூலை 23) இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு