தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெங்கட் பிரபு, தன்னைப் பற்றி வெளியான செய்திக்கு கோபமடைந்து இருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘மாநாடு’. சிம்பு நாயகனாக நடிக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சம்பள விஷயத்தில் வெங்கட் பிரபுக்கும், சுரேஷ் காமாட்சிக்கும் தகராறு, படம் பாதியில் நிற்கிறது என்று செய்திகள் வெளியானது. இதையறிந்து கோபமடைந்த வெங்கட் பிரபு "யப்பா சாமி.. ஏன் ஏன் ஏன்.. தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க. மாநாடு படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா" என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..