29,Mar 2024 (Fri)
  
CH
சினிமா

நரகாசூரன்’ ஓடிடி-யில் வெளியிடுவதிலும் சிக்கல்

கார்த்திக் நரேன் - அரவிந்த் சாமி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படத்தை ஓடிடி-யில் வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘நரகாசூரன்’. கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்தது. 

இதனிடையே அண்மையில், இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட முயற்சி நடப்பதாகவும், ஆகஸ்ட் 13-ந் தேதி இந்தப் படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பைனான்சியர்களிடம் இருந்து இந்தப் படத்திற்கான செட்டில்மென்ட்டை முடித்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. அதனால் வருகிற ஆகஸ்ட் 13-ந் தேதி ‘நரகாசூரன்’ வெளியாவது சந்தேகம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




நரகாசூரன்’ ஓடிடி-யில் வெளியிடுவதிலும் சிக்கல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு