25,Apr 2024 (Thu)
  
CH
சமையல்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சூப்

பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.

தேவையான பொருள்கள்

பசலைக் கீரை - ஒரு கட்டு

உளுந்து (வறுத்தது) - ஒரு ஸ்பூன்

தக்காளி - 2

வெங்காயம் - ஒன்று

பூண்டு - 10 பல்

இஞ்சி - ஒரு துண்டு

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

புதினா - ஒரு கைப்பிடி

மிளகு - அரை ஸ்பூன்

சீரசும் - அரை ஸ்பூன்

உப்பு, மஞ்சள், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

பசலைக்கீரை, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், மஞ்சள், உளுந்து ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

அரைத்த கலவையை தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக, கீரையையும் போட்டு வதக்கி, ஆறு டம்ளர் நீர் சேர்த்து பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவு உப்புச் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

சத்தான சுவையான பசலைக்கீரைசூப் ரெடி.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சூப்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு