22,May 2025 (Thu)
  
CH
இந்திய செய்தி

மீண்டும் விமான சேவை

இந்தியாவில் கொரோனா 2-வது அலை தாக்கியதை அடுத்து உலகில் பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துகளை ரத்து செய்தன.

இதேபோல குவைத் நாடும் பயணிகள் விமானப் போக்குவரத்தை கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து குவைத்துக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. குவைத் தடை விதித்ததால் இந்த போக்குவரத்து முற்றிலும் நின்றுபோனது.

இந்த நிலையில் மீண்டும் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தொடங்குவதாக குவைத் அறிவித்துள்ளது. இதேபோல வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்கான போக்குவரத்தையும் நிறுத்தி இருந்தது. அதுவும் மீண்டும் தொடங்கப்படும் என்று குவைத் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளின் போக்குவரத்து ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்தது. ஜூலை 1-ந்தேதி முதல் அந்த நாடுகளுக்கு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கான போக்குவரத்தும் தொடங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மீண்டும் விமான சேவை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு