உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம். செரிமானப் பிரச்சனையை நீக்கும்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2 துருவியது
தேங்காய் துருவல் - அரை கப்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
தயிர் - அரை கப்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
ஒரு வாணலியில் துருவிய பீட்ரூட், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
துருவிய தேங்காய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
அதை பீட்ரூட் உடன் சேர்த்து கிளறவும்.
இந்த கலவையை 7 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும் தயிர், உப்பு சேர்த்து கிளறவும். கலவை கொதிப்பதற்கு முன்பு அடுப்பை அணைத்து விடவும்.
சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பீட்ரூட் கலவையுடன் சேர்க்கவும்.
சுவையான பீட்ரூட் பச்சடி ரெடி.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..