‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த சமந்தா, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார்.
ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் கடந்த ஜுன் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த தொடரில் இலங்கைத் தமிழர்களை பற்றியும், விடுதலைப்புலிகளை பற்றியும் தவறான தகவல்கள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக அரசும், சில அரசியல் கட்சிகளும் இத்தொடருக்கு தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. ஆனால், எதிர்ப்புகளை மீறி இந்த தொடர் வெளியானது.
இந்த சர்ச்சைகள் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த சமந்தா, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “மக்களுக்கென இருக்கும் சொந்த கருத்துக்களை நான் மதிக்கிறேன். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை, அப்படி நடந்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், இந்த தொடர் வெளியான பின்னர் பல சத்தங்கள் நின்றுவிட்டது. இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை என்று சிலர் சொன்னதையும் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..