21,May 2024 (Tue)
  
CH
இந்திய செய்தி

கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு

இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 30-ந் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

அதன்பின்பு மாநிலம் முழுவதும் விட்டுவிட்டு பெய்த மழை மலையோர மாவட்டங்களில் மட்டும் அதிகமாக பெய்து வந்தது. ஜூலை மாத மத்தியில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்த மழை பின்னர் விட்டுவிட்டு பெய்தபடி இருந்தது.

இந்த நிலையில் கேரளா முழுவதும் இன்று முதல் 30-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 30-ந் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நாட்களில் மாநிலம் முழுவதும் 64.5 மி.மீ. முதல் 114.5 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பேரிடர் மேலாண்மை துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். 24 மணி நேரமும் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு