30,Apr 2024 (Tue)
  
CH
சினிமா

கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு

பல படங்களில் பிசியாக நடித்து வரும் யோகி பாபு, தனது சொந்த இடத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. இவர் காமெடி வேடங்கள், கதையின் நாயகன் உள்ளிட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தற்போது அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திலும், விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்திலும், மிர்ச்சி சிவா இயக்கத்தில் ஆர்.கண்ணன் இயக்கும் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர். தனது சமூக வலைத்தள பக்கத்தில் முருக கடவுளின் புகைப்படத்தை தான் வைத்திருப்பார். தனது திருமணத்தையும் குலதெய்வ கோயிலில் மிகவும் எளிமையான முறையில் நடத்தி முடித்தார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகரம் பேடு எனும் கிராமத்தில் இருக்கும் தனது சொந்த இடத்தில் வராகி அம்மன் கோயிலை கட்டியுள்ளார். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் தற்போது விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதில் யோகிபாபு தமது குடும்பத்துடன் கலந்துகொண்டு தரிசனம் பெற்றார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு